MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மருமகன் இறந்த செய்தி கேட்ட மாமியாருக்கு மாரடைப்பு! கதறிய நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில்!

மருமகன் இறந்த செய்தி கேட்ட மாமியாருக்கு மாரடைப்பு! கதறிய நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில்!

திண்டுக்கல்லில் திருமணமான 10 மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணி மனைவியைப் பார்க்கச் சென்ற இளைஞர் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்து கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த மாமியார் மாரடைப்பால் இறந்தார், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 Min read
vinoth kumar
Published : Aug 28 2024, 11:26 AM IST| Updated : Aug 28 2024, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Love Marriage

Love Marriage

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). ஹோட்டல் ஒன்றில் பாஸ்ட் புட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர், 10 மாதங்களுக்கு முன் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாளை (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

23
Dindigul News

Dindigul News

நிறைமாத கர்ப்பிணியான நாகம்மாள் தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். குழந்தை பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மனைவியை பார்க்க அருண்குமார் தினமும் இரவு மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வேலை முடிந்து சிலுக்குவார்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர், அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே சாலையோரம் உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 

இதையும் படிங்க: School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

33
Pregnant Wife Admitted Hospital

Pregnant Wife Admitted Hospital

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் கர்ப்பிணியாக உள்ள நிலையில் மருமகன் உயிரிழந்த செய்தியை கேட்ட மாமியார் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து தாயும் உயிரிழந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதை அடுத்து நாகம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved