- Home
- Gallery
- Anna Serial: ஜெயிலுக்கு போக தயாரான சண்முகம்.. பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!
Anna Serial: ஜெயிலுக்கு போக தயாரான சண்முகம்.. பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் நடந்தது மட்டும் சொல்லு என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் என்று.

அதாவது, வைகுண்டம் மற்றும் சண்முகத்தின் தங்கைகள் என எல்லோரும் ஷண்முகத்தை காப்பாத்த பாக்கியத்திடம் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லு என்று கெஞ்சுகின்றனர். பரணி சண்முகம் இனிமே அருவாளை தூக்க மாட்டேனு சொல்ல சொல்லு.. நான் அம்மா கிட்ட பேசுறேன் என்று சொல்ல சண்முகம் பதில் பேசாமல் இருக்கிறான்.
Anna serial
மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்த லாயர் பாக்கியத்திடம் நடந்த விஷயங்களை மட்டும் சொல்லுங்க என்று சொன்னதும் சௌந்தரபாண்டி நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், நடந்தது மட்டும் சொல்லு என்று சொல்கிறார்.
Anna Serial
மறுபக்கம் சண்முகம் அமைதியாக இருப்பதை பார்த்து பரணி நான் பேச மாட்டேன் என்று சொல்ல வைகுண்டம் மற்றும் தங்கைகள் சண்முகத்திடம் அருவா எடுக்க மாட்டேன்னு சொல்லுடா என்று சொல்ல என் தங்கச்சிங்களுக்கு ஒன்னுனா நான் அறிவாள் எடுப்பேன்.. அந்த சௌந்தரபாண்டியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனா கூட கவலை இல்லை என சொல்கிறாள்.
Anna Serial
இதனால் பரணி நான் பேச மாட்டேன் என்று பதில் கொடுக்க வைகுண்டமும் சண்முகத்தின் தங்கைகளும் சௌந்தரபாண்டியிடம் வந்து கெஞ்சுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.