மகளை நடிகையாக்க அம்மாவை அட்ஜெஸ்ட் பண்ண கூப்பிட்ட பிரபலம்...பொது நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி பரபரப்பு பேட்டி...
Senthoora Poove Sreenithi: பிரபல நடிகை ஸ்ரீநிதி, தன்னை நடிகையாக்க அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண பிரபலம் ஒருவர் தனது அம்மாவை அழைத்ததாக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
srinidhi
சினிமாவில் நடித்து பிரபலம் ஆகும், நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் மக்கள் மத்தியில் இடம் பிடித்து பிஸியான நடிகையாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீநிதி.
srinidhi
ஸ்ரீநிதி ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றார். இவரது நடிப்பு திறமைக்கு கை மேல் பலன் கிடைத்தது போல் படங்கள், மியூசிக் வீடியோ என்று ஸ்ரீநிதி பிஸியான நடித்துக் கொண்டிருந்தார்.
srinidhi
இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்ரீநிதி. இந்த தொடரின் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இருந்தார்.
srinidhi
இது தவிர சயபென்சில்’ என்ற மலையாள படத்திலும், ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற தமிழ் படத்திலும் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இவ்விரு படங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
srinidhi
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், ’நான் சிறுவயதிலேயே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பிரச்சினையை சந்தித்து உள்ளேன்' என்றார்.
srinidhi
மேலும், அவர் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு படத்தில், நடிக்க இருந்தபோது அந்த படத்தின் பிரபலம் அட்ஜஸ்ட் பண்ணிவிங்களா? என்று கேட்டார்கள்.தனக்கு அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் என்னவென்று புரியவில்லை என்பதால், மகள் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால் கூட பரவாயில்லை, அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என்று கூறியது தன்னுடைய அம்மாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.