Sani Peyarchi 2022: ஜூன் 3ம் தேதி சனி மற்றும் புதன் கூட்டணி...புதிய ஒளி பிறக்கும்..வாழ்வில் ராஜயோகம் உறுதி...
Sani Peyarchi 2022 Palangal: ஜூன் முதல் வாரத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். ஜூன் 3 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசிக்கு சென்றதுபோலவே, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்த கொள்வோம்.
Sani Peyarchi 2022
சனி மற்றும் புதனின் கூட்டணி 2022:
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமும் மிகவும் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதன்படி, ஜூன் முதல் வாரத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். ஜூன் 3 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசிக்கு சென்றதுபோலவே, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது. புதன் அடுத்த மாதம் வரையிலும், சனி அக்டோபர் வரை இதன் உடனடித் தாக்கம் எதிரொலிக்கும். இந்த இரண்டு ராசி மாற்றம் தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.
Sani Peyarchi 2022:
ரிஷபம்:
ரிஷப ராசியில் உள்ள புதனின் மாற்றமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். புதிய பணி கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வருமானம் பெருகும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பண வரத்து அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணம் திரும்ப வரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.
Sani Peyarchi 2022
மேஷம்:
சனி மற்றும் புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வீடு-வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். வாழ்வில் புதிய ஒளி பிறக்கும்.
Sani Peyarchi 2022
மிதுனம்:
புதன் மற்றும் சனியின் மாற்றம் மிதுனத்திற்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு அரசுவேலை கிடைக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. வருமானம் அதிகரிப்பதான சூழல் உருவாகி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.