- Home
- Gallery
- சந்தியா செய்த துரோகம்.. தெரிய வந்த உண்மையால் மாயா எடுத்த முடிவு? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு அப்டேட்!
சந்தியா செய்த துரோகம்.. தெரிய வந்த உண்மையால் மாயா எடுத்த முடிவு? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ரகுராம் குடும்பத்தினர் மொத்தமும் கோவிலில் கூடியிருக்க மாயாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

sandhya ragam Serial
அதாவது, மாயா வீட்டில் கல்யாணத்திற்கு தயாராகி கொண்டிருக்க ரகுராம் குடும்பத்தினர் கோவிலில் காத்திருக்க குமரேசன் சீனுவை தேடி செல்ல ஒரு இடத்தில சீனுவின் பைக் நிற்பதை பார்க்கிறான். பிறகு உள்ளே சென்று தேடி பார்க்க சீனு கட்டப்பட்டு இருப்பதை பார்த்து ஷாக்காகி சண்டை போட்டு அவனை மீட்டு கொண்டு வருகிறான்.
sandhya ragam Serial
சீனு கோவிலுக்கு வர ரகுராம் நீ உன் ப்ரண்ட்டோட கல்யாணத்துக்கு போறதா தானே சொன்ன.. இப்போ என்ன இங்க வந்திருக்க என்று சீனு என் ப்ரண்ட்டே பார்த்துக்கறதா சொல்லிட்டேன் மாமா என்று சமாளிக்கிறான். சீனுவை பார்த்த ஷாரு, லிங்கம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.
sandhya ragam Serial
அடுத்து வீட்டில் மாயா கல்யாணத்திற்கு தயாராகிய பிறகு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று ரூமில் போட்டோவை தேட போட்டோ கிடைக்காத காரணத்தினால் பெரியம்மா ரூமில் தேடி பார்க்கலாம். அங்க கண்டிப்பா இருக்கும் என்று கிளம்பி செல்கிறாள்.
sandhya ragam Serial
மறுபக்கம் தனம் சீனுவிடம் மாமா மாயா கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை யாரு? சொல்லி என்று கேட்க இன்னும் அரை மணி நேரத்தில் உனக்கே தெரிய போகுது என்று சொல்லி சமாளிக்க தனம் நீ சொல்லு மாமா என்று தொந்தரவு செய்கிறாள்.
sandhya ragam Serial
அடுத்து மாயா ஜானகி ரூமில் பீரோவை திறந்து சந்தியாவின் போட்டோவை தேட சந்தியா கைப்பட எழுதிய டைரி கிடைக்க மாயா அதை திறந்து பார்க்கிறாள். டைரியில் ஜானகிக்காக பார்த்த மாப்பிளையை திருமணம் செய்து கொண்டு துரோகம் செய்தது போன்ற விஷயங்களை படிக்க மாயா அதிர்ந்து போகிறாள்.
sandhya ragam Serial
இதையடுத்து அம்மா செய்த துரோகத்தை நானும் செய்ய கூடாது என்று முடிவெடுத்து கோவிலுக்கு வரும் மாயா மணமேடையில் உட்காராமல் ரகுராமை கட்டிப்பிடித்து நான் தப்பு பண்ண இருந்தேன் என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா என்று கதறி அழுகிறாள். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் நான் இந்த வீட்டு பெண்ணாகவே இருக்கேன் என்று சொல்ல கிஷோர் நீ என்ன பேசிட்டு இருக்க வா வந்து உட்காரு என்று மாயாவை கூப்பிட ரகுராம் தொடாத அவ எப்போ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே அவ என் வீட்டு பொண்ணு ஆகிட்டா, இனிமே அவளுடைய கல்யாண விஷயத்தில் நீங்க தலையிட கூடாது என்று துரத்தி விடுகிறார்.
மாயாவின் முடிவால் ரகுராம், ஜானகி ஆகியோர் சந்தோஷமடைய ஷாரு இந்த கல்யாணம் எப்ப வேணாலும் நடக்கலாம், அதை நடக்க விட கூடாது.. அது எதாவது செய்யணும் என்று திட்டமிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.