- Home
- Gallery
- ரியாவுக்கு ஆப்பு வைத்த கார்த்திக்! அபிராமி சொன்ன வார்த்தையால் சந்தோஷத்தில் தீபா! கார்த்திகை தீபம் அப்டேட்!
ரியாவுக்கு ஆப்பு வைத்த கார்த்திக்! அபிராமி சொன்ன வார்த்தையால் சந்தோஷத்தில் தீபா! கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கண்விழித்த நிலையில், கார்த்தி ரியாவுக்கு ஆப்பு வைக்க தயாராகியுள்ளார்.

தீபா மனம் உருகி, கடவுளை நினைத்து பாடிய நிலையில்... அபிராமி கண் விழிக்கிறார். தீபா இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் கூறி மருத்துவமனைக்கு அழைத்து வர, அபிராமி கார்த்தியை பார்த்து நான் உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டேனா? என்று கேட்க அவன் அப்படியெல்லாம் இல்லை என்று தன்னுடைய சோகத்தை மறைத்து கொண்டு, ல்ல தீபா ஆமாம் அத்தை அவர் உங்கள நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார் என சொல்கிறாள்.
பின்னர் தீபாவோட கழுத்தை பாருங்க என்று கார்த்திக் சொல்ல, அபிராமியும் பார்த்து விட்டு என்ன நீ மஞ்ச கயிற்றோட இருக்க.. உன்னுடைய தாலி எங்கே என்று கேட்க, தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்ல அபிராமி அவளை நினைத்து சந்தோஷப்பட, கார்த்தியிடம் நீ மீண்டும் தீபா கழுத்தில் தாலி கட்டணும் அதை நான் பார்க்கணும் என சொல்கிறார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் உள்ளே வந்து விடுகின்றனர். பின்னர் அபிராமி ஒவ்வொருத்தரையாக நலம் விசாரிக்க, அவர்களும் அபிராமியை நலம் விசாரிக்கின்றனர். மருத்துவரும் அமிராமி இப்போது நலமாக உள்ளார் நீங்கள் டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார்.
ஆனால் கார்த்திக் இதுக்கெல்லாம் காரணமான ரியாவை கைது செய்த பிறகு தான் அம்மாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று அருண் ஆனந்திடம் சொல்ல, அப்போது ரியாவே ஆனந்துக்கு போன் செய்து பேச கார்த்திக் கோபப்படாம பேசி ஓரிடத்திற்கு வர வை என்று சொல்கிறான். ஆனந்தும் கார்த்தி சொன்னது போலவே பேசி ரியாவை ஓரிடத்திற்கு வர வைத்து, அவளை சந்திக்க அவள் ஆனந்திடம் நீ என்னை உன்னுடைய மனைவியா ஏத்துக்கிட்டா போதும் அதை தவிர நான் வேற எதையும் யோசிக்கல என்று சொல்கிறாள். ஆனந்த் அவளை கன்னத்தில் அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறான்.
Amaran: Amaran : தீபாவளி ரேசில் இணைந்த சிவகார்த்திகேயன்! 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Karthigai deepam
பிறகு போலீஸ் அங்கு வர, ரியா கைதாக பின்னாடியே வரும் கார்த்தியை பார்த்த அவள் உன்ன சும்மா விட மாட்டேன் என்று கூறியபடியே ஜெயிலுக்கு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது பற்றி அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.