MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tamilnadu Police: இனிமேல் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் ஆப்பு தான்.. ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறை..!

Tamilnadu Police: இனிமேல் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் ஆப்பு தான்.. ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறை..!

தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 28 2023, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தமிழகத்தில் காவல்துறையினர் தங்களது சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை ஓட்டிக்கொண்டு விதிகளை மீறுவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக போலீஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய தயக்கப்படுகின்றனர். இந்நிலையில், போலீஸ் ஸடிக்கர் ஒட்டப்பட்டுள்ள தனிப்பட்ட வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மண்டல ஆய்வாளர்களுக்கும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சிலர் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி வருவது தெரியவந்துள்ளது. தேச விரோதிகள், குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவதால் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெரும் பாதுகாப்பு பிரச்சனை உருவாகும். 

33

மேலும் போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்தி மோசடி மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் காவல்துறையினரின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். அப்படி மீறி போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால், தீவிரமாக கண்காணித்து அதில் பயணிப்பவர் யாராக இருந்தாலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved