- Home
- Gallery
- Southern Railway: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Southern Railway: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Southern Railway
கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதேபோல், பண்டிகை நாட்கள், சிறப்பு விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Tirunelveli to Mettupalayam Train
அந்த வகையில் நெல்லை டூ மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் டூ நெல்லை இடையே வாராந்திரச் சிறப்பு ரயிலை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN school education Department: அரசு பள்ளிகளுக்கு குட் நியூஸ்.. லிஸ்ட் போட்ட தமிழக அரசு!
Tirunelveli Railway Station
நெல்லை இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் ( (06030) ரயிலானது அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை வழியாக மறுநாள் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
இதையும் படிங்க: TRAIN : 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளி ரயில் டிக்கெட்.! சிறப்பு ரயில் அறிவிப்பு எப்போது வெளியாகும்.?
Special Train
மறுமார்க்கம் திங்கட்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்நிலையில் இந்த வாராந்திர சிறப்பு ரயில் ஜுலை மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை டூ மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், ஜூலை 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் மேட்டுப்பாளையம் டூ நெல்லை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.