Ajith: அஜித் மீது அளவு கடந்த காதல்...ரகசியத்தை போட்டுடைத்த மொழி படத்தின் நடிகை...
Ajith -Shalini: அலைபாயுதே பட சூட்டிங்கின் பாதியில், தான் ஷாலினிக்கு அஜித் மீது காதல் வந்ததாக நடிகையும், நடன கலைஞருமான ஸ்வர்ணமால்யா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகை, நடிர்கள் திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்று தான் என்றாலும், கூட சில ஜோடிகள் எப்போதும், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பது வழக்கம்.
அதில், 90-களில் சூர்யா - ஜோதிகா, அஜித் -ஷாலினி போன்ற பிரபல ஜோடிகள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டன. சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவரின் காதல் வீட்டில் தெரிய பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு, பச்சைக்கொடி காட்டினார்.
இதையடுத்து, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே, 2002ல் அஜித், ஷாலினி திருமணம் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
ஷாலினி குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு, முழுக்கு போட்டு விட்டு ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் மாறியுள்ளார்.
அவ்வப்போது, அஜித் -ஷாலினி குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக வலம் வருவது உண்டு. சமீபத்தில் கூட, க்ருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்துள்ள ஷாலினி, தனது கணவர் அஜித்துடன் சேர்ந்து கியூட்டாக போஸ் கொடுத்தது வைரலானது.
இந்நிலையில், நடிகையும், நடன கலைஞருமான ஸ்வர்ணமால்யா, அலைபாயுதே பட சூட்டிங்கின் பாதியில், தான் ஷாலினிக்கு அஜித் மீது காதல் வந்ததாக கூறியுள்ளார்.
Ajith
ஸ்வர்ணமால்யா சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் சன் டிவியில் ஒளிபரப்பான என்னுடைய நிகழ்ச்சியை பார்த்து, மணி ரத்தினம் சார், என்னை அலைபாயுதே படத்தில் நடிக்க அழைத்தார்.
ajith shalini
அப்போது ஷாலினியுடன் நடித்து வந்த போது அவர் அஜித்தை எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது என்றார். தற்போது இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.