’மகாமுனி’மஹிமா நம்பியாரின் ‘இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்’ படங்கள்...
’மகாமுனி’ படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். எது மாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரி நடிப்பை அப்படத்தில் அவர் வழங்கியிருப்பதாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டிவரும் நிலையில், தனது சினிமா எண்ட்ரி குறித்து சின்னச் சின்ன குறிப்புகளாகத் தருகிறார் மஹிமா.
எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது.
எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம்
நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்"
என் போட்டோ சாட்டைப் பட இயக்குநர் கண்களில் பட அதன்பிறகு வந்த வாய்ப்பு தான் சாட்டை படம்.
சாட்டைப் படத்தில் நடிக்கும் போது எனக்கு சூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார் தான் நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார்.
தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் என்னை தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள்.
"என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது மகாமுனி.
"எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது.
நான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச்சொன்னார்.
"ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிகமிக பிரண்ட்லியான மனிதர்.
"எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், "நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல" என்று சொன்னார். எனக்கு லைப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது."
விக்ரம்பிரவுடன் அசுரகுரு படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதியபடங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளேன்"
நடிகர்களில் ரஜினிகாந்த் சாரை கூடுதலாக பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா ரொம்பப்பிடிக்கும்"
தொடர்ந்து நல்ல நடிகை என்று பெயரெடுத்தால் மட்டும் போதும். விருது வாங்கும் ஆசௌயெல்லாம் இல்லை.