- Home
- Gallery
- திடீரென தாலியை கழட்டிய தீபா.. அபிராமிக்கு நடந்த ஆபரேஷன் சக்சஸ் ஆனதா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
திடீரென தாலியை கழட்டிய தீபா.. அபிராமிக்கு நடந்த ஆபரேஷன் சக்சஸ் ஆனதா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி உயிர் பிழைக்க வாய்ப்பு கம்மி என டாக்டர் அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி உயிர் பிழைக்க 20 % மட்டுமே வாய்ப்பிருப்பதாக டாக்டர் அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, போலீசில் சிக்கிய ஐஸ்வர்யா நான் பேசியது அந்த ரியா இல்ல என்று சொல்லி வீடியோ கால் செய்து வேறொரு பெண்ணை காட்டி தப்பித்து விடுகிறாள்.
Zee Tamil Karthigai deepam serial
இதனை தொடர்ந்து அபிராமியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்ல அருணாச்சலத்திடம் கையெழுத்து கேட்க, அவர் நான் போட மாட்டேன், அவ பிழைத்து வரலைனா கடைசி வரைக்கும் நான் குற்ற உணச்சியிலேயே செத்து போய்டுவேன் என்று உடைந்து அழுகிறார். இதையடுத்து அருணிடம் கொடுக்க அவனும் கையெழுத்து போட தயங்க, ஆனந்தும் அப்படியே சொல்ல கார்த்திக் கண்ணீருடன் கையெழுத்து போட அபிராமிக்கு 36 மணி நேரம் நடக்க உள்ள ஆபரேஷனுக்கான முதற்கட்ட பரிசோதனைகள் தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்... பிறந்தநாள் கொண்டாட வேணாம்னு சொல்லிட்டு; மூவி அப்டேட் விடுறீங்க! எல்லாம் நடிப்பா விஜய்? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
Karthigai deepam serial Update
எல்லாரும் அப்படியே உடைந்து போய் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா நைசாக நழுவி வெளியே வந்து ஒரு ஓட்டலுக்கு சென்று பரோட்டா, சிக்கன் என்று விதவிதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருக்க அருண் அங்கு வர இவன் நம்மள பார்த்தா பெரிய பிரச்னையாகிடுமே என்று டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொள்கிறாள். அருண் ஓட்டலில் தண்ணீர் கேட்க உள்ள வந்து குடிங்க என்று சொல்லி கூப்பிட ஐஸ்வர்யா டேபிள் அருகே வந்து தண்ணீர் குடிக்க ஐஸ்வர்யா மறைந்தபடியே இருக்க ஒரு கட்டத்தில் அவளை பார்த்து விட அருண் ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விடுகிறான்.
Karthigai deepam serial Today Episode
பிறகு ஹாஸ்பிடலில் முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து அபிராமியை ஆபரேஷனுக்கு அழைத்து செல்ல, ஆளாளுக்கு அபிராமிக்கு ஆறுதல் சொல்ல தீபா கார்த்திக் சாருக்கும் எனக்கும் நடந்த கல்யாணத்தை நீங்க பார்க்கல, நீங்க வெளியே வந்து கார்த்திக் சார் கையால் என் கழுத்தில் தாலி கட்டுறதை பார்க்கணும், பார்ப்பீங்க அது வரைக்கும் மஞ்ச கயிறோடு தான் இருப்பேன் என்று கழுத்தில் இருக்கும் தாலி செயினை கழட்டி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... வாக்கு எண்ணிக்கையின் போது நடந்த ட்விஸ்ட்... ஜெயித்தது பரணியா? செளந்தரபாண்டியா? - அண்ணா சீரியல் அப்டேட்