- Home
- Gallery
- Nayanthara: திருமணம் முடிந்ததும் நயன்தாரா போட்ட முதல் கண்டிஷன்...நடிகைகள் பின்பற்றும் அதே பழைய ஃபார்முலாவா..?
Nayanthara: திருமணம் முடிந்ததும் நயன்தாரா போட்ட முதல் கண்டிஷன்...நடிகைகள் பின்பற்றும் அதே பழைய ஃபார்முலாவா..?
Nayanthara-Vignesh Shivan: திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா முத்த காட்சிகள், படுக்கை கட்சிகளின் நடிக்க மாட்டேன், என புது கண்டிஷன் போட்டுள்ளததாக தகவல் வெளிவாகியுள்ளது. தற்போது, இந்த செய்தி இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

nayanthara and vignesh shivan
நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை, கடந்த ஜூன் 9-ந் தேதி 20 புரோகிதர்கள் மந்திரம் ஓத பாரம்பரிய முறைப்படி, திருமணம் செய்து கொண்டார். இவர்களது, திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர ஓட்டலில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
nayanthara and vignesh shivan
இவர்களது திருமண நிகழ்வில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்திஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். அதன் பிறகு திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு ஒரு சர்ச்சையில் சிக்கினர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் தரப்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
nayanthara and vignesh shivan
அதற்கு மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் செம டிரெண்டாகி வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று விமானம் மூலம் கொச்சிக்கு மறு வீட்டிற்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இன்னும், இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் கொச்சியில் தங்கி இருக்க போகிறார்களாம்.
Nayanthara and Vignesh Shivan
இந்தநிலையில், திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா புது கண்டிஷன் போட்டுள்ளததாக தகவல் வெளிவாகியுள்ளது. தற்போது, இந்த செய்தி இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. அதாவது, படங்களில் இனி ஹீரோக்களுடன் முத்த காட்சிகள், படுக்கை கட்சிகளின் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மாற்றம் இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். பொதுவாக நடிகைகள் திருமணம் முடிந்ததும், இது போன்று கூறுவது வழக்கம் தான். தற்போது, அதையேதான் நயன்தாராவும் கூறியுள்ளாராம். நயன்தாராவின் இந்த முடிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.