MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உடனே அறிக்கையை கொடுங்க! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!

உடனே அறிக்கையை கொடுங்க! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து, பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Aug 27 2024, 08:19 AM IST| Updated : Aug 27 2024, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Department of Elementary Education

Department of Elementary Education

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தலைமைச் செயலர் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 100 சதவீத உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டால் பொதுப் பணித்துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

23
Government School

Government School

இதுதவிர அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டிடங்களை ஆய்வு செய்து தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு 2 வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட வரும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பொறியாளருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இதையும் படிங்க: School College Holiday: ஆகஸ்ட் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியாக போகும் அறிவிப்பு!

33
District Education Officers

District Education Officers

மேலும், அவர்கள் உதவியுடன் தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் தேவைப்படும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved