- Home
- Gallery
- Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rain
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் சுன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Chennai Rain
சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: இந்த தேதிகளில் வெளியே போகாதீங்க.. எந்தெந்த இடங்களுக்கு போக கூடாது.. வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்!
Tamilnadu Rain Alert
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது (காலை 10 மணிவரை) மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.