MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தலைமுடிக்கு மருதாணியா? அப்ப முதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

தலைமுடிக்கு மருதாணியா? அப்ப முதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

தலைமுடிக்கு மருதாணியை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்த பிறகே, முடிக்கு மருதாணியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. 

2 Min read
Kalai Selvi
Published : Jun 05 2024, 12:26 PM IST| Updated : Sep 26 2024, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

முடியின் நிறத்தை மாற்ற (அ) நரைத்த முடியை மறைக்க நம்மில் பலர் மருதாணியை தலையில் தடவுவது உண்டு. மருதாணியில் ஏற்கனவே பண்புகள் மறைந்துள்ளன அவை உங்கள் தலைமுடிக்கு வண்ணம் தரும். அதே சமயம், கோடை காலத்தில் தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க சிலர் மருதாணியை தடவுவது உண்டு.

28

ஆனால், அதை அதிகமாகப் பயன்படுத்தினாலோ (அ) அதிக நேரம் தலையில் வைத்தாலோ தலைமுடிக்கு பல வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

38

நீங்கள் தேவைக்கு அதிகமாக மருதாணியை தலைக்கு பயன்படுத்தினால், அது உங்கள் தலைமுடிக்கு நன்மைக்கு பதிலாக தீங்கைதான் விளைவிக்கும். அதைப்பற்றி விரிவாக இங்கே அறிந்து கொள்ளுங்கள்..

48

மருதாணியைப் பயன்படுத்திய உடனேயே உங்கள் தலைமுடி பட்டுப் போலவும் பளபளப்பாகவும் தோன்றினாலும், மருதாணி முடியின் வறட்சியை அதிகரிக்கச் செய்யும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

58

உண்மையில், மருதாணியைப் பயன்படுத்துவதன் மூலம், முடியின் அமைப்பு மோசமடையத் தொடங்குகிறது. இதன் காரணமாக முடி கரடுமுரடாகவும், உடையும் பிரச்சனையும் ஏற்படும்.

68

அதுமட்டுமின்றி, உங்கள் தலைமுடிக்கு மருதாணி அதிகம் பயன்படுத்தினால் அது முடி உதிர்வை ஏற்படுத்தும். ஏனெனில், மருதாணி போடுவதால் முடி வறண்டு, உலர்ந்த முடி எளிதில் உடையும். குறிப்பாக மெஹந்தியுடன் வேறு எதையும் கலக்காமல் இருந்தால் இந்த பிரச்சனை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: கூந்தலுக்கு அழகு தரும் தேங்காய் பால்..! இப்படி யூஸ் பண்ணுங்க..

78

அதுபோல, சந்தையில் கிடைக்கும் மெஹந்தியில் ரசாயனங்கள் இருப்பதால், இவை உச்சந்தலைக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க:  Summer Hair Care Tips : கோடையில் உங்கள் கூந்தல் வளர இந்த டிப்ஸ் அப் பாலோ பண்ணுங்க!!

88

எனவே, மருதாணியை தலைமுடிக்கு அடிக்கடி போடாமல், மாதம் ஒருமுறை மட்டும் போடுவது நல்லது. இது மட்டுமின்றி, மருதாணி போடும் நேரத்தை 40 முதல் 50 நிமிடங்களுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, மெஹந்தி போட்ட பிறகு நீங்கள் ஹேர் மாஸ்க் பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் எண்ணெய் பயன்படுத்துங்கள். இதனால் முடி வறண்டு போகாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved