MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்! நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேச பதிவு!

அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்! நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேச பதிவு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அறிந்து 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில்... இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய ஆவேசத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Jun 20 2024, 07:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kallakurichi

Kallakurichi

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம் தான் தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. விஷச்சாராயம் அருந்தியதால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 70-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை கூடுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.

24

கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கி உள்ளது. அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50000 நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் கலந்த விஷச் சாராய உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கதறும் மக்கள்... முதல் ஆளாக விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காண கள்ளக்குறிச்சி விரைகிறார் விஜய்!
 

34
Kallakurichi

Kallakurichi

அரசியல் வாதிகள், தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று... விஷ சாராயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலனை கேட்டு அறிந்து... அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதே போல் உயிரிழந்தோரின் சடலங்களை ஒரே இடத்தில் எரிக்கவும், புதைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வீடியோ வெளியானது. தளபதி விஜய்யும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 

44

இந்நிலையில் எப்போதும் சமூக கருத்து கொண்ட, விஷயங்களை பேசும் ஜிவி பிரகாஷ்.. "காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த  பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை' என பதிவிட்டுள்ளார்.

ப்ரீ வெடிங் நிகழ்ச்சியில்.. ராதிகாவுடம் ரொமான்ஸ் செய்த ஆனந்த் அம்பானி ! பலரும் பார்த்திடாத Unseen போட்டோஸ் இதோ

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜி. வி. பிரகாஷ் குமார்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved