- Home
- Gallery
- Gutka Scam Case: குட்கா வழக்கு! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்..!
Gutka Scam Case: குட்கா வழக்கு! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்..!
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Gutka scam
சென்னை செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Vijayabaskar
அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இவர்கள் பெயர்களுடன் வேறு சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ADMKvsBJP : ராமர் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதா கூறியது என்ன.?ஆடியோ வெளியிட்டு அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி
CBI
இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் விசாரித்தனர். பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் இருந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்து தமிழக ஆளுநர் பிறப்பித்த உத்தரவும் தாக்கல் செய்யப்பட்டது.
Special Court
இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.