டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் – யுவராஜ் சிங்!
டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி வலம் வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

T20 World Cup 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரவு நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
T20 World Cup 2024
இந்த தொடருக்கு முன்னதாக வார்ம் அப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி பேட்டிங் செய்ய வரவில்லை. ஆனால் அணியில் இடம் பெற்றிருந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார்.
T20 World Cup 2024
இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய கோலி 98.66 சராசரியில் 296 ரன்கள் குவித்தார். இதே போன்று இதுவரையில் விளையாடிய 25 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 81.5 சராசரியில் 1141 ரன்களை குவித்துள்ளார். அதோடு, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
T20 World Cup 2024
இந்த நிலையில் தான் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி வலம் வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இதுவரையில் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி முன்னிலையில் இருந்தார். அது போன்று தான் இந்த தொடரிலும் அதிக ரன்கள் குவிப்பார்.
T20 World Cup 2024
காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தங்களது பலத்திற்கு ஏற்றவாறு விளையாடுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
T20 World Cup 2024
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை தொடரை வென்றது. இதையடுத்து அரையிறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இன்னும் இறுதிப் போட்டிக்கு வந்து வெற்றி பெற சிறிது காலம் மட்டுமே உள்ளது என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.