ரூபாய் நோட்டில் இருக்கும் இந்த சாய்ந்த கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ரூபாய் நோட்டில் இருக்கும் இந்த சாய்ந்த கோடுகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பணம் இல்லாமல் எந்த செயலும் சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் நாம் பணத்தை செலவு செய்யாமல் வாழa முடியாது. ரூபாய் நோட்டை பொறுத்த வரை பாதுகாப்புக்காக பல்வேறு விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி பணத்தில் இருக்கும் சில முக்கிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
500 rs
குறிப்பாக ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் பல சாய்வு கோடுகள் இடம்பெற்றிருக்கும். அதற்கான காரணம் சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கலாம்.. பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ரூபாய் நோட்டின் விளிம்பில் அச்சிடப்பட்டுள்ள இந்த சாய்ந்த கோடுகளுக்கு ப்ளீட் மார்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
money
இது அந்த ரூபாய் நோட்டின் மதிப்பிற்கு ஏற்ப கூடலாம் அல்லது குறையலாம். கண்பார்வை இல்லாதவர்கள் எந்த ரூபாய் நோட்டு என்பதை தெரிந்து கொள்ள கொள்ளவே இந்த வரிகள் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த கோடுகளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் எளிதாக எந்த ரூபாய் நோட்டு என்பதை புரிந்து கொள்ள முடியும். விரல்களை தேய்த்து பார்ப்பதன் மூலம் பார்வையற்றவர்கள் நோட்டின் மதிப்பை கண்டுபிடிக்கின்றனர்.
ஒவ்வொரு நோட்டின் மதிப்பை பொறுத்தும் கோடுகள் இடம்பெற்றிருக்கும். உதாரணமாக 100 ரூபாய் நோட்டை எடுத்தால் அதன் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். 200 ரூபாய் நோட்டுகளிலும் 4 கோடுகள் இருக்கும், ஆனால் அதனுடன் இரண்டு பூஜ்ஜியங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
அதே போல் 500 ரூபாய் நோட்டுகளில் 5 வரிகளும், 2000 ரூபாய் நோட்டுகளில் 7 வரிகளும் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்கள் இந்த வரிகளை தொடுவதன் மூலம் நோட்டின் மதிப்பை புரிந்து கொள்ள முடியும்.