ஓயாமல் பாதத்தில் எரிச்சலா..? காரணம் இதுதாங்க.. உடனே சரி செய்ங்க..
பலர் தங்களது உள்ளங்காலில் அடிக்கடி எரியும் உணர்வு எற்படுவதாகச் சொல்லுகிறார்கள். உண்மையில், உள்ளங்காலில் இப்படி எரிச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்ன.. அதை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

சில சமயங்களில் பலருக்கு அவர்களது உள்ளங்கால்கள் எரிவதாக உணர்கிறார்கள். இதனுடன், உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு போன்றவையும் சந்திக்கின்றனர். பொதுவாக இந்த பிரச்சனை இரவில் தான் அதிகமாக உள்ளது. எனவே, உள்ளங்கால்கள் ஏன் எரிகிறது..? இதை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நீண்ட நாள் கட்டுப்படுத்தாமல் இருந்தால், இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும். இது சமிக்ஞைகளுக்குப் பதிலாக உள்ளங்கால்களில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்: கால்களில் எரியும் உணர்வு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது தான். ஆம், தற்போது பலர் வைட்டமின் பி12, வைட்டமின் பி6, வைட்டமின் பி9 அதாவது, ஃபோலேட் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைட்டமின்களின் குறைபாடுகளால் தான் உள்ளங்காலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது கால்களுக்கும் தசைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததற்கு வழிவகுக்கிறது.
இரத்த சோகை: ஆண்களை விட பெண்களுக்கு தான் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது . உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைந்தாலோ (அ) வைட்டமின் பி குறைபாட்டாலோ இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். இரத்த சோகை பலவீனம், சோம்பல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனுடன் காலில் எரியும் உணர்வையும் ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: பாத வெடிப்பு வராமல் முற்றிலும் தடுக்க சூப்பர் ஐடியா இதோ...!
தைராய்டு பிரச்சினை: தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையின்மை நரம்பு சேதத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, தைராய்டு சுரப்பியின் செயலற்ற தன்மை பாதங்களில் எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Foot care tips: நகங்கள் பளபளப்பாக இருக்க..பாதங்களில் வெடிப்பு நீங்க..இந்த 6 டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்..!
சிறுநீரகங்கள் பிரச்சினை: உடலில் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், இரத்தத்தில் நச்சுகள் சேரும். இதனால் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். இவற்றில் ஒன்றுதான் புற நரம்பியல். இதனால் பாதங்களில் எரிச்சல் ஏற்படும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D