- Home
- Gallery
- அட்வான்ஸ் வாங்கிட்டு டிமிக்கி கொடுக்கும் தனுஷ்! தயாரிப்பாளர் சங்கத்தின் புதுவிதியால் ‘அடங்காத அசுரனுக்கு’ செக்
அட்வான்ஸ் வாங்கிட்டு டிமிக்கி கொடுக்கும் தனுஷ்! தயாரிப்பாளர் சங்கத்தின் புதுவிதியால் ‘அடங்காத அசுரனுக்கு’ செக்
தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

actor dhanush
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
dhanush
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8-வாரங்களுக்கு பிறகே OTT- தளங்களில் வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதையும் படியுங்கள்... ராயன் படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க... ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆகும் 7 தமிழ் படங்கள் - முழு லிஸ்ட்
Dhanush in trouble
ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
Actor Dhanush
வருகிற 16.08.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை அறிவுறுத்தி உள்ளனர். அதனால், வருகின்ற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்துவிதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... Raayan : 100 கோடியை நெருங்கும் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் ரவுசு காட்டும் ராயன் - 3 நாள் கலெக்ஷன் நிலவரம் இதோ