MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 70 வயசு ஆச்சு! உடல்நலக்கோளாறு வேற இருக்கு! நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கொடுங்க! இபிஎஸ்!

70 வயசு ஆச்சு! உடல்நலக்கோளாறு வேற இருக்கு! நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கொடுங்க! இபிஎஸ்!

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தயாநிதி மாறன் தொடர்பாக அவதூறாகப் பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Aug 27 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

கடந்த ஏப்ரல் 15ம் தேதி அன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை தொகுதிக்கு செலவு செய்யவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

24
Dayanidhi Maran

Dayanidhi Maran

இதையடுத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  அதில், தேர்தல் நேரத்தில்  இபிஎஸ் எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மத்திய சென்னை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்துக்கும் மேலான தொகையை எனது தொகுதியின் மேம்பாட்டுக்காக செலவழித்துள்ளேன். தொகுதியில் செய்யப்பட்ட பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன்.

34
Defamation Case

Defamation Case

இபிஎஸ் அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னையில் உள்ள, எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

44
Edappadi Palanisamy Vs Dayanidhi Maran

Edappadi Palanisamy Vs Dayanidhi Maran

அப்போது வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரான இபிஎஸ் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயவேல் வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதி ஒத்திவைத்தார். இந்நிலையில், மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 70 வயதாகிவிட்டது, மூத்த குடிமகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறேன். குறிப்பாக உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துவருகிறேன். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை. எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
நீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved