- Home
- Gallery
- Power Shutdown in Chennai: அடகவுளே.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Power Shutdown in Chennai: அடகவுளே.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Chennai Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
Power Shutdown
அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
power shutdown in chennai
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ஈஞ்சம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக பனையூர் மற்றும் குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, காயிதே மில்லத் தெரு, வேலு நாயக்கர் தெரு, ஆதித்யா ராம் நகர், என்ஆர்ஐ லேஅவுட், விஜிபி சவுத் அவென்யூ, ஜெ.நகர் செம்மொழி தெரு, பனையூர் குப்பம் பகுதி சீஷோர் டவுன் 1 முதல் 13 வது அவன்யூ வரை, சமுத்ரா தெரு, ராஜாஜி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.