- Home
- Gallery
- செளந்தரபாண்டிக்கு தண்ணிகாட்ட ரெடியாகும் சூடாமணி... கோவில் நகைகளை மீட்டாரா பரணி? அண்ணா சீரியல் அப்டேட்
செளந்தரபாண்டிக்கு தண்ணிகாட்ட ரெடியாகும் சூடாமணி... கோவில் நகைகளை மீட்டாரா பரணி? அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீல் சேரில் வெளியே வந்த சௌந்தர பாண்டியை ஷண்முகம் மடக்கி பிடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீல் சேரில் வெளியே வந்த சௌந்தர பாண்டியை ஷண்முகம் மடக்கி பிடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சண்முகம் பட்டாசை கொளுத்தி போட்டு சௌந்தர பாண்டியை பதற வைத்து ஓட விட சௌந்தரபாண்டி நாடகம் போட்டது முத்துப்பாண்டி மற்றும் பாண்டியம்மாவிற்கு தெரிய வர, இருவரை அதிர்ச்சி அடைகின்றனர்.
Zee Tamil Anna Serial
அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்ததும் பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் அவரை பிடித்து கண்டமேனிக்கு திட்டுகின்றனர். இசக்கி இதுக்கு நீங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறீர்கள் என்று முத்துப்பாண்டியை திட்ட, அவன் ஒன்றும் புரியாமல் இருக்கிறான். அடுத்ததாக பதவி ஏற்று வீட்டுக்கு வந்த பரணி மற்றும் சண்முகம் சூடாமணியை பார்க்க முடிவெடுக்கின்றனர். பிறகு வைகுண்டத்துடன் கேரளா ஜெயில் அம்மனை பார்க்க போவதாக சொல்ல, தங்கைகள் யார் அந்த ஜெயில் அம்மன் என்று பெருமையாக பேசுகிறாள். இதனால் சண்முகத்தின் தங்கைகள் நாங்களும் வருகிறோம் என்று சொல்ல, பரணி நீங்க எல்லாம் வரக்கூடாது என்று சொல்லி விடுகிறாள்.
இதையும் படியுங்கள்... கவினின் ‘பிளெடி பெக்கர்’ படத்துக்காக ஜெயிலர் பட சென்டிமென்டை கையிலெடுத்த நெல்சன்... ரிலீஸ் தேதி லீக்கானது
Anna Serial Update
கேரளா அம்மனை பார்க்க நானும் வரேன் என்று சொல்ல, சண்முகம் அப்பா உனக்கு எல்லாம் தெரியும் நீ அமைதியா இரு என்று சொல்லி விட்டு பரணியோட கிளம்பி வருகிறான். ஜெயிலில் வைத்து சூடாமணியை பார்த்து தர்மகத்தா பதவியில் ஜெயித்த விஷயத்தை சொல்ல, அவள் சந்தோஷப்படுகிறாள். கூடிய விரைவில் நகைகளை கண்டுபிடித்து உங்களை வெளியே எடுக்கிறோம் என்று சொல்லி சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு பேச வைக்க, சூடாமணி கூடிய சீக்கிரம் நான் வருவேன்டா என்று மிரட்ட அவர் அதிர்ந்து போகிறார்.
Anna serial Today Episode
இதையடுத்து சௌந்தரபாண்டி பாண்டியம்மா, சனியன் ஆகியோரிடம் அந்த சூடாமணி கூடிய சீக்கிரம் வெளியே வரப் போறா.. அந்த கோவில் நகை பரணி கையில சிக்காம ஏதாவது செய்யணும் என்று சொல்ல, பாண்டியம்மாவும் நீ சொல்ற மாதிரியே செய்வோம் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்... தனத்துக்கு பளார் என அறைவிட்ட மாயா - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்