MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பெண்களுக்கு 50 ஆயிரம் உதவி தொகை.! புதிய திட்டம் அறிமுகம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? வழிமுறை என்ன.?

பெண்களுக்கு 50 ஆயிரம் உதவி தொகை.! புதிய திட்டம் அறிமுகம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? வழிமுறை என்ன.?

தமிழக அரசு மகளிர் மேம்பாட்டிற்காக புதிய திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் மானியம் வழங்க உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இந்த மானியம் சுயதொழில் தொடங்க வழங்கப்படுகிறது.

2 Min read
Ajmal Khan
Published : Aug 29 2024, 09:41 PM IST| Updated : Aug 30 2024, 07:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மகளிருக்கான தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உதவி தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பெண்கள் சிறு தொழில் செய்ய உதவிடும் வகையில் 50ஆயிரம் மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

26

சுய தொழில் தொடங்க உதவி

தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2022ம் ஆண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக  200 பயனாளிகளுக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
 

36

50ஆயிரம் ரூபாய் மானியம்

இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

46

நிதி ஒதுக்கீடு- ஒப்புதல் அளித்த அரசு

இந்தநிலையில்  சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக்கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரிய நிலையில், தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

56

விதிமுறை என்ன.?

25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டும் மானியம் பெற தகுதியுடையவராவார்.

 

66

யாருக்கெல்லாம் கிடைக்கும்

மானியத்தை பெற, விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved