MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திமுக அமைச்சர்கள் மீதான தீர்ப்பு குறித்து விவாதம் நடத்த பயமா? நீதிபதி சொன்னது என்ன? அம்பலப்படுத்தும் பாஜக!

திமுக அமைச்சர்கள் மீதான தீர்ப்பு குறித்து விவாதம் நடத்த பயமா? நீதிபதி சொன்னது என்ன? அம்பலப்படுத்தும் பாஜக!

ஒரு தீர்ப்பு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற தீர்ப்பு உதாரணம், அதிகாரிகளின் துணையோடு இந்த வழக்கை எப்படி முடித்தார்கள் என்றெல்லாம் தெளிவாக, விரிவாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 09 2024, 07:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Narayanan Thirupathy

Narayanan Thirupathy

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் அளித்த தீர்ப்பானது வரலாற்று சிறப்பு மிக்கது. 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த இருவர் மீதும் 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், 2022ம் ஆண்டு  குற்றம் சாட்டிய அதே லஞ்ச ஒழிப்பு துறை இவர்கள் குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இவர்களை விடுவிக்க கோரியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Justice Anand venkatesh

Justice Anand venkatesh

இந்நிலையில், கடந்த வருடம் தாமாகவே முன்வந்து இதற்கு எதிரான வழக்கை பதிவு செய்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, மீண்டும் இவ்வழக்கை தீர விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

34
KKSSR Ramachandran Thangam Thennarasu

KKSSR Ramachandran Thangam Thennarasu

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், அரசுத்தரப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டதாக நீதியரசர் குற்றம் சாட்டியுள்ளதோடு, ஒரே நாளில் எப்படி ஒரே மாதிரியான மனுவை பல்வேறு வழக்குகளில் அரசுத்தரப்பு தாக்கல் செய்யும்? லஞ்ச ஒழிப்பு துறையும், அரசியல்வாதிகளும் இணைந்து அதிகார துஷ்பிரயோகத்தில் எவ்வாறு ஈடுபட்டுள்ளார்கள்? 

44
Narayanan Thirupathy Vs DMK

Narayanan Thirupathy Vs DMK

ஒரு தீர்ப்பு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற தீர்ப்பு உதாரணம், அதிகாரிகளின் துணையோடு இந்த வழக்கை எப்படி முடித்தார்கள் என்றெல்லாம் தெளிவாக, விரிவாக குறிப்பிட்டுள்ளார். கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், பரபரப்பான இந்த தீர்ப்பு குறித்து, எந்த ஒரு தொலைக்காட்சியும் விவாதங்கள் நடத்தி மக்களுக்கு எடுத்து செல்லாதது ஏன்? பயமா? பாசமா? ஓ! திமுகவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ? வாழ்க ஜனநாயகம், வளர்க தமிழக ஊடக தர்மம் என கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved