- Home
- Gallery
- குழந்தையும் ... தெய்வமும் ஒன்னுன்னு சும்மாவா சொன்னாங்க! மகள் பிறந்தநாளில் சினேகா வெளியிட்ட கியூட் போட்டோஸ்!
குழந்தையும் ... தெய்வமும் ஒன்னுன்னு சும்மாவா சொன்னாங்க! மகள் பிறந்தநாளில் சினேகா வெளியிட்ட கியூட் போட்டோஸ்!
நடிகை சினேகா தன்னுடைய மகள், 4-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில், வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

கோலிவுட் திரையுலகின் கியூட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கும், சினேகா மற்றும் பிரசன்னாவின் மகள் ஆத்யந்தாவின் 4-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்.. சினேகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
சினேகா - பிரசன்னா ஜோடி.. 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க துவங்கிய நிலையில், 2012-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக இந்த தம்பதிக்கு விஹான் என்கிற மகனும் ஆத்யந்தா என்கிற மகளும் உள்ளனர்.
விஹானுக்கு தற்போது 7 வயதாகும் நிலையில், இன்று சினேகாவின் மகள் ஆத்யந்தா தன்னுடைய 4-ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சினேகா மகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி, அவரின் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சினேகாவின் குழந்தைகள் இருவரும், ஆடு, கோழி குஞ்சு, நாய் என அணைத்து விலங்குகள் மீதும்... எந்த ஒரு பாகுபாடும் இன்றி அணைத்து மனிதர்கள் மீதும் பாசம் காட்டுவதை இந்த புகைப்படங்கள் உணர்த்தியுள்ளது.
மேலும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு... சினேகா போட்டுள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் பொம்மை போல் இருக்கும் மகளுக்கு. எங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்த அனைத்து அன்பு மற்றும் மகிழ்ச்சிக்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் தாழ்வாக இருக்கும்போது, எனக்கு ஒரு நண்பன் தேவைப்படும்போது, நீ என் அம்மாவாகிவிடுகிறாய். நீங்கள் ஒரு தூய்மையான ஆத்மா, கடவுள் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் தரட்டும். நீங்கள் என்றும் எதையும் மாற்ற அனுமதிக்காதீர்கள். நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம் என் தங்கமே என தெரிவித்துள்ளார்
மேலும் சினேகா பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து... கடவுள் எப்படி பாகுபாடு பார்ப்பது இல்லையோ அப்படி தான் குழந்தைகளும். எல்லோர் மீதும் பாசம் காட்டுவார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை இந்த புகைப்படங்கள் பிரதிபலிப்பதாக தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.