கன்னியாகுமாரி விஜய் சிலைக்கு இப்படி ஒரு சிறப்பு உள்ளதா..? தூள் கிளப்பும் தளபதி ரசிகர்கள்..!
கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் தளபதி போன்றே மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி, அதனை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான ஜாம்பவான்களான 20 பேருக்கான சிலைகள் மட்டுமே உள்ளன . அந்த முக்கியமானவர்கள் பட்டியலில் தற்போது நடிகர் விஜய் மெழுகு சிலையும் இணைத்துள்ளது. தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது. விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக்கொள்ள அங்கு குவிந்து வருகிறார்கள்.
அது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
செம்ம யங் தளபதி
பாக்கெட்டில் கை வைத்து கொண்டு ஸ்டைலிஷ் போஸ் கொடுக்கிறார் தளபதி
ரசிகர்களை ஈர்த்த விஜய்
புகைப்படம் எடுக்க குவியும் ரசிகர்கள்
வெளிநாட்டு ரசிகர்களும் விஜயுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம்