திருமணமாகி 5 வருடத்திற்கு பின் கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி பிரபலம் ஐஸ்வர்யா..! வைரலாகும் pregnancy போட்டோஸ்
சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா பிரபாகர் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர்நடனக் கலைஞராகவும் மாடல் அழகியாகவும் மாறினார். இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது 5 வருடத்திற்கு பின், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம் மற்றும் இசை திறமை ரியாலிட்டி ஷோ சன் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கியுள்ளார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01ffa4hzvt36cmjk29x06p40ac/233707270-1755566244643878-5110261158287836436-n-jpg_300x300xt.jpg)
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ என்ற புராணத் தொடரில் திரௌபதி கதாபாத்திரத்திலும் நடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியிலும் சில தொடர்கள் மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினார்.
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பின் அவ்வப்போது சோசியல் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். தற்போது, திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின் கர்ப்பமாக உள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.
இவரது pregnancy போட்டோ ஷூட் சிலவற்றையும் வெளியிட, இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடடிய புகைப்படத்தை பகிர்த்துள்ள ஐஸ்வர்யா... எவ்வளவு அழகு கண்ணே பட்டுடும்