நெகடிவிட்டி வேணாம்... ஹாப்பியா இருங்க லைஃப் நல்லா இருக்கும் - கவர்ச்சி போட்டோ பதிவிட்டு கருத்து சொன்ன ராஷ்மிகா
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா சொல்லியுள்ள கருத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
நடிகை ராஷ்மிகா தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. அப்படத்தில் அவருக்கு நடிக்க பெரியளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், டான்ஸில் விஜய்க்கே டஃப் கொடுத்து ரசிகர்களை மெர்சலாக்கினார்.
தற்போது ராஷ்மிகா கைவசம் தமிழ் படங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், இந்தியிலும், தெலுங்கிலும் செம்ம பிசியாக நடித்து வருகிறார் ஜிமிக்கி பொண்ணு. இந்தியில் ஏற்கனவே இவர் நடிப்பில் குட் பாய் மற்றும் மிஷன் மஜ்னு ஆகிய படங்கள் வெளியான நிலையில், தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இதையும் படியுங்கள்... எத்தனை கோடி கொடுத்தாலும் அவர்கூட நடிக்க மாட்டேன்... டாப் ஹீரோ மீது செம கடுப்பில் நயன்தாரா..?
இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர விஜய் தேவரகொண்டாவுடனும் ஒரு படத்தில் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா, கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அப்படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கருத்து சொல்லி உள்ளார். அதன்படி அவர் பதிவிட்டுள்ளதாவது : “ஹாப்பியா இருங்க... தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். உங்களது சந்தோஷமும், அமைதியும் அதிலிருந்து தான் கிடைக்கும். நெகடிவிட்டியோடு இருந்தால் வாழ்க்கை மிகவும் சின்னதாகிவிடும்” என குறிப்பிட்டிருந்தார் ராஷ்மிகா. சமீபத்தில் அவரைப்பற்றி எதிர்மறை கருத்துகள் சோசியல் மீடியாவில் அதிகம் பரவி வந்த நிலையில், ராஷ்மிகா இவ்வாறு பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சம்பள விஷயத்தில் ஷங்கரை நெருங்கும் லோகேஷ் கனகராஜ்... லியோ படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?