குளிர்பானத்தில் போதை மாத்திரை கொடுத்து இளம் பெண் கற்பழிப்பு... பிரபல நடிகரின் மகன், மனைவி மீது வழக்குப்பதிவு!
இப்படிப்பட்ட மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹாக்ஷயப் மற்றும் மனைவி யோகீதா பாலி மீதும் இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மிதுன் சக்கரவர்த்தி, இவர் தமிழில் கூட ஆதி, நிக்கி கல்ராணி நடித்த “யாகாவராயினும் நாகாக்க” படத்தில் மும்பை தாதாவாக நடித்திருக்கிறார்.
அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மிதுன் சக்கரவர்த்தி, இதுவரை 576 படங்களில் நடித்துள்ளார்.
இப்படிப்பட்ட மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹாக்ஷயப் மற்றும் மனைவி யோகீதா பாலி மீதும் இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சில மாதங்களுக்கு முன்பு மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த அந்தபெண் 015 ஆம் ஆண்டில் இருந்து மஹாக்ஷய்யை காதலித்து வந்ததாகவும் ஒரு நாள் கூல்ட்ரிங்ஸில் போதை மாத்திரை கலந்துகொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் கூறியிருந்தார்.
மேலும் மஹாக்ஷயப் அம்மா தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யச் சொல்லி மிரட்டினார் என்றும் கூறியிருந்தார். ஆனால் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து டெல்லிக்கு மாறிய அவர், அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மற்றும் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.