ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் காதலர் விக்னேஷ் சிவனுடன் படு நெருக்கமாக New Year கொண்டாடிய நயன்தாரா..!
நடிகை நயன்தாரா, இந்த வருட புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கட்டி அணைத்து, வரவேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர்.
அப்போது ஐதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
ஐதராபாத் விமான நிலையத்தில் காதலி நயனை கரம் பிடித்து அழைத்து வந்த விக்னேஷ் சிவனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது நியூ இயர் கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜொலிஜொலிக்கும் குட்டையான கவர்ச்சி உடையில், காதலனை கட்டி அணைத்தபடி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த புகைப்படத்தை பார்த்து பல சிங்கிள்ஸ் புலம்பி வருகிறார்கள்.