பிறந்து சில தினங்களே ஆன குழந்தை... முதல் முறையாக மைனா நந்தினி கணவர் வெளியிட்ட புகைப்படம்!
சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கொண்ட மைனா நந்தினி - யோகேஸ்வரன் ஜோடிக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில் முதல் முறையாக தங்களின் குழந்தை குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.
சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து யோகேஸ்வரனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்த மைனா நந்தினி, கர்ப்பமாக இருந்த நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
மேலும் தாயும், சேயும் நலமாக இருப்பதாக வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டோ ஒன்றையும் பகிர்ந்து தெரிவித்தார். இதற்கு இருவருடைய ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் குழந்தை பிறந்து சில தினங்களே ஆகும் நிலையில், குழந்தை கை மட்டும் தெரியும் படி புகைப்படம் ஒன்றை மைனா நந்தினியின் கணவர் யோகி பகிர்ந்துள்ளார். விரைவில் குழந்தையின் முகத்தையும் காட்டுவோம் என்பதையும் இதில் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.