பீச் புகைப்படம் கேட்ட ரசிகர்... தாராள மனசோடு பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி சீரியல் நாயகி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றின் மொழி' சீரியல் நாயகி பிரியங்கா ஜெயின், பீச் புகைப்படம் கேட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரளச்செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது, வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், அண்ணன் - தம்பி பாசம் என விதவிதமாக சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சீரியல்களில் ஒன்று “காற்றின் மொழி”.
இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் உடன் பிரியங்கா என்பவர் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிறிய வயதில் இருந்தே, அப்பாவால் ஒதுக்கப்படும் நாயகி எப்படி அப்பாவின் பாசத்தை அடைகிறார், தன்னுடைய காதலனுடன் எப்படி சேர்கிறார் என்கிற கதையை பல்வேறு திருப்புமுனைகளோடு கூறி வருகிறார்கள்.
மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில்... முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ப்ரியங்கா ஜெயின், சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர்.
சமீபத்தில் ரசிகர்களின் லைவ் சாட் செய்த இவரிடம், ரைஸ்கர் ஒருவர் பீச் புகைப்படம் வெளியிடும் படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்று பிரியங்காவும், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
காற்றின் மொழி சீரியலில் பாவாடை தாவணி மற்றும் சேலையில் மட்டுமே தரிசனம் தரும் இவரா.. இப்படி என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தன்னுடைய 16 வயதிலேயே மாடலிங் மூலம் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கிய பிரியங்கா ஜெயின், பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். ஆனால் அவரால் தொடர்ந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை.
ஆனால் விஜய் டிவி தொலைக்காட்சியில், கிராமத்து வேடத்தில் இவர் நடித்து வரும் 'காற்றின் மொழி' தொடர் இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.