நடு ராத்திரியில் தீராத தொல்லை... அலறியடித்துக்கொண்டு போலீசில் புகார் கொடுத்த கவர்ச்சி நடிகை...!
முன்னாள் கவர்ச்சி நடிகையான மாயாவிற்கு நடு ராத்திரியில் தொல்லை கொடுத்த நபர்கள் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாயா. பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா இவருடைய பேத்தி ஆவார்.
கடந்த மாதம் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாயாவின் மகன் விக்னேஷ் குமாரை 8 பேர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கினர்.
தனியார் மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பிரச்சனையே இன்னும் முடியவில்லை.
மாயா சென்னை சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவர் எப்போதும் தனது காரை வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்துவது தான் வழக்கமாம்.
அப்படித்தான் நேற்று இரவும் தனது வேகன் ஆர் காரை பார்க் செய்துள்ளார். அப்போது திடீரென நள்ளிவிரவில் பயங்கர சத்தம் கேட்க குடும்பத்தினர் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அங்கு மாயா காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை யாரோ மர்ம நபர்கள் சுக்கு நூறாக உடைத்துள்ளனர்.
சத்தம் கேட்டு மாயா மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது சிலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
Maya