தளபதி விஜய் பட நாயகியின் சொகுசு வீட்டை வாங்கிய பிரபல நடிகை..! இத்தனை கோடியா..?
தளபதி விஜய் பட ஹீரோயின் வீட்டை, பல கோடி ரூபாய் செலவு செய்து நடிகை ஒருவர் வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், 2002 ஆம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தில், ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
2000 ஆம் ஆண்டு, உலக அழகி பட்டம் பெற்ற இவர் கதாநாயகியாக அறிமுகமானதே தமிழில் தான் என்றாலும், பின்னர் முழுமையாக பாலிவுட் நடிகையாக மாறினார்.
ஹிந்தியில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து... அதிக சம்பளம் பெரும் டாப் நடிகைகள் லிஸ்டில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, இவரை விட 10 வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
இதனையடுத்து அவருக்கு சொந்தமான மும்பையிலும் ஒரு சில சொகுசு வீடுகள் உள்ளது.
இதில், மும்பையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வீட்டை, பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு சுமார் ரூ 7 கோடிக்கு பிரியங்கா சோப்ரா விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், விரைவில் அந்த வீட்டில் புதுப்பித்து குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.