கவர்ச்சி கன்னிகளுடன் வலம் வந்த இயக்குனர்....பண மோசடி வழக்கில் வசமாக சிக்கினார்..
தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.56 லட்சம் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
RAM GOPAL VARMA
கவர்ச்சி பொங்கும் படங்கள் மூலம் பிரபல இயக்குனராக இருந்து வரும் ராம் கோபால் வர்மா மீது சேகர ஆர்ட் கிரியேஷன்ஸின் கொப்படா சேகர் ராஜு அளித்த புகாரின் பேரில், சைபராபாத் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மியாபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் அளித்த புகார் மனுவில் 'திஷா' படத்தைத் தயாரிப்பதற்காக வர்மா தன்னிடம் கடன் வாங்கியதாகவும், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு அதைத் திருப்பித் தருவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
Ram gopal varma
திஷா திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவர் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் அதே இடத்தில் காவல்துறையினரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட கதையாகும்.
Ram gopal varma
இந்தக்கதையை படமாக்குவதற்காக வர்மா பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்துள்ள மனுதாரர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரமணா ரெட்டி என்பவர் மூலம் வர்மாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் வர்மா படம் தயாரிப்பதாக கூறி கடந்த 2020 ஜனவரியில் ரூ.8 லட்சமும், சில நாட்களுக்குப் பிறகு ரூ.20 லட்சமும் பெற்றார். பின்னர் ஆறு மாதங்களில் தொகையை திருப்பித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் மீண்டும் பிப்ரவரி 2020 இல் RGV தன்னை அணுகியதாகவும், நிதிச் சிக்கலைக் காரணம் காட்டி மேலும் 28 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் ராஜு கூறியுள்ளார்.
Ram gopal varma
இந்த பணத்தை படம் வெளியாவதற்கு முன்பு அல்லது அதற்கு முன் மொத்தத் தொகையையும் திருப்பித் தருவதாக RGV உறுதியளித்ததாகவும், ஆனால் ஜனவரி 2021 இல் வர்மா படத்தின் தயாரிப்பாளர் அல்ல என்பதை அறிந்ததாகவும் புகார்தாரர் காவல்துறையிடம் கூறினார். திரைப்பட தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆர்ஜிவி மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 417 (ஏமாற்றுவதற்கான தண்டனை), 420 (ஏமாற்றுதல் மற்றும் 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.