கவர்ச்சி உடையில் கடற்கரையை சூடேற்றிய அமலாபால்...! இணையத்தை கலக்கும் ஹாட் போட்டோஸ்..!
கருப்பு நிற உடையில் கடற்கரையில் அமர்ந்து சாவகாசமாக காற்று வாங்கும் புகைப்படத்தை நடிகை அமலாபால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.
தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.
அந்த வகையில் குட்டை டவுசர் அணிந்து இவர் விதவிதமாக வெளியிட்ட புகைப்படங்கள், ரசிகர்களை கிறங்க செய்தது.
இதை தொடர்ந்து தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் , கடற்கரையில் அமர்ந்தபடி இவர் கொடுத்த போஸ் வேற லெவலில் உள்ளது.
ஓவர் கவர்ச்சி காட்டாமல், மிதமான கவர்ச்சியில் துளியும் மேக்அப் இல்லாமலால் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தையே சூடாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.