தீபாவளியில் அசம்பாவிதமா?? : முதலுதவி சிகிச்சைக்கு 104-ஐ அழையுங்கள்!
தீபாவளி பண்டிகை நாளான இன்று தமிழகம் முழுவதும் ‘108 ஆம்புலன்ஸ்’ சேவையில், 811 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ற ஆண்டு தீ விபத்து நடந்த இடங்களில் தனிக் கவனம் செலுத்தி 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும் என்று, 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் தெரிவித்துள்ளது.
தீ விபத்து குறித்த முதலுதவி சிகிச்சைக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். இன்றைய தினம் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும், 104 சேவை பணியாளர்களும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.