Asianet News TamilAsianet News Tamil

ஆண் நண்பர் கண்முன்னே இளம்பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்... வீடியோ வெளியானதால் அதிர்ச்சி..!

உறவினரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவருடன் வந்த இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Woman gang-raped...video of act posted online
Author
Uttar Pradesh, First Published Nov 3, 2019, 3:28 PM IST

உறவினரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவருடன் வந்த இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Woman gang-raped...video of act posted online

உத்தரப்பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டம், மவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நண்பருடன் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, இருவரையும் 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர், அந்த இளைஞரை அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். 

Woman gang-raped...video of act posted online

இதனையடுத்து, அவர் கண்முன்னே அந்த இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கதறகதற பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடா்பாக, 14 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்த அந்த பெண் வீடியோ விவகாரம் வெளியானதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். 

Woman gang-raped...video of act posted online

ஆனால், அதை வாங்க போலீசார் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும், வீடியோ பதிவு வேகமாக பரவியதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தப்பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 6 போ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios