Asianet News TamilAsianet News Tamil

பெண் ஓட ஓட விரட்டி படுகொலை... கணவன் வெறிச்செயல்..!

திண்டுக்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife killed...husband arrest
Author
Tamil Nadu, First Published Apr 7, 2019, 9:59 AM IST

திண்டுக்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (45). இவர்களுக்கு கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ளார். கருப்பாயிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பாயி தனது கணவருடன் போபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அதன் பின் கணவர் பல முறை குடும்பம் நடத்த அழைத்தும் வரவில்லை. wife killed...husband arrest

நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக முருகன் சுக்காம்பட்டிக்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல காலை கருப்பாயி வேலைக்கு செல்வதற்காக அங்கிருந்த பெண்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த முருகன் மனைவியை அரிவாளால் வெட்டி முயன்றார். உயிருக்கு பயந்து ஓடிய மனைவி கருப்பாயியை ஓட ஓட விரட்டி வெட்டிக் படுகொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே கருப்பாயி உயிரிழந்தார். wife killed...husband arrest

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருப்பாயி உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது  விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மனைவியை கணவரே ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios