Asianet News TamilAsianet News Tamil

வேறொருவருடன் காதல்? டிக் டாக் வீடியோவால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்!! கணவனின் வெறிச்செயல்...

இன்டர்நெட்டில் வரும் டிக் டாக் வீடியோவால் இன்றைய சமூதாயம் நாளுக்கு நாள்  சீரழிந்து வரும் நிலையில், குடும்ப பெண்களும் இதற்கு அடிமையாகி மீள முடியாமல் தங்களது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றனர். இந்த வீடியோவால் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

wife killed by her husband at coimbatore
Author
Chennai, First Published Jun 1, 2019, 11:03 AM IST

இன்டர்நெட்டில் வரும் டிக் டாக் வீடியோவால் இன்றைய சமூதாயம் நாளுக்கு நாள்  சீரழிந்து வரும் நிலையில், குடும்ப பெண்களும் இதற்கு அடிமையாகி மீள முடியாமல் தங்களது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றனர். இந்த வீடியோவால் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குளத்துபாளையத்தைச் சேர்ந்த நந்தினி, கனகராஜ் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளன. நந்தினி தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல, கனகராஜ் சென்ட்ரிங் வேலையும் பார்த்து வருகிறார். 

இந்நிலையில், நந்தினி அடிக்கடி போனில் பேசியதாகவும், அவருக்கு வேறொருவருடன் அதனால் அவர் மீது கனகராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி வர்கள் வாழ்க்கை சந்தேகத்தால் சீரழிய, டிக் டாக் வீடியோ மீது நந்தினிக்கு மீது நாட்டம் இருந்ததால், விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனால் கடுப்பான கனகராஜ்க்கும் அவருக்கும்   இடையே பெரிய கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. இதனால் காதல் திருமணம் கசக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர் டிக் டாக் வீடியோ செய்வதை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார் கனகராஜ். ஆனாலும், தனது கணவன் பேச்சை கேட்க்காமல் தன்போக்கில் இருந்துள்ளார் நந்தினி.

இருவரும் விலகி இருந்தாலும் அடிக்கடி நேரிலும் தொலைபேசியிலும் நந்தினியிடம் கனகராஜ் சண்டை போட்டுக்கொள்வார்களாம், இந்நிலையில் வழக்கம் போல நந்தினிக்கு போன் செய்த கனகராஜ், பலமுறை முயற்சித்தும் நந்தினி செல்போன் பிசியாக இருந்தால், கடுப்பான அவர், நந்தினி பணிபுரியும் கல்லூரிக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கனகராஜை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios