காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டே வீடியோ.. சமூக வலைதளத்தில் வெளியிட்ட டாக்டர்.. கொடுர கொலை.
காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டாக்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதலியே தனது நண்பர்களுடன் சேர்ந்து இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டாக்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதலியே தனது நண்பர்களுடன் சேர்ந்து இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் டாக்டர் விகாஷ் ராஜன் (27) இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து விட்டு சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்து, இதனால் அவர் கர்நாடகத்துக்கே சென்றார். அங்கு பிரதீபா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது, பின்னர் அது காதலாக மாறியது, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதையும் படியுங்கள் : சிறுமி பாலியல் பலாத்காரம்! வெறி தீராததால் கொலை! வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
இந்நிலையில்தான் விகாஷ்சும் அவரது காதலியும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். காதலியின் நிர்வாணத்தை அவர் அவ்வப்போது வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து வந்தார்.இந்நிலையில் திடீரென காதலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளத்தில் வெளியானது.
இதையும் படியுங்கள் : ட்விட்டரில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்களின் ஆபாச வீடியோஸ்.. கதறும் சமூக ஆர்வலர்கள்
இதைக் கண்ட காதலி மிகுந்த அதிர்ச்சி அடைந்தார், காதலன் விகாஷிடம் கேட்டதற்கு ' நான்தான் ஒரு ஜாலிக்காக' அதை இன்ஸ்டாவில் போலி கணக்கு மூலம் பகிர்ந்ததாக மிகச் சாதாரணமாக பதில் அளித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரதீபா, காதலன் விகாஷை போட்டு தள்ள முடிவு செய்தார். இதனால் கடந்த 10ஆம் தேதி காதலனை பெங்களூருவில் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரதிபாவின் சக நண்பர்களும் வந்திருந்தனர்.
அனைவரும் மது அருந்தினர், அப்போது விகாஷிக்கு போதை தலைக்கேறியது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட காதலி பிரதீபா வீடு துடைக்கும் மாப்பு கட்டை எடுத்து காதலன் விகாஷை தலையில் ஓங்கி அடித்தார், பிரதிபாவின் நண்பர்களும் வெறிகொண்டு தாக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே விகாஷ் உயிரிழந்தார். தற்போது போலீஸார் விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது, இதில் காதலி பிரதீபா, மற்றும் அவரது நண்பர்கள் கௌதம், சுனில், சுஷிசி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.