Asianet News TamilAsianet News Tamil

நடுரோட்டில் ரவுடியை கொத்துக்கறி போட்ட கூலிப்படை கும்பல்.. முகத்தை செதில் செதிலாக வெட்டி கொடூரம்..

அடிதடி, ஆள்கடத்தல், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது.  இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அப்பு தெருவில் உள்ள ஆவின் பார்லர் அருகே இவர் நின்று நடந்து சென்று கொண்டிருந்தார். 

The mercenary gang who beat up Rowdy in the middle of the road .. cut his face into scales and brutally ..
Author
Chennai, First Published Sep 15, 2021, 10:44 AM IST

சென்னை மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடு ரோட்டில் வைத்து  கூலிப்படை கும்பல் ரவுடியின் முகத்தை  சிதைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதி அப்பு தெருவை சேர்ந்தவர் கோபி என்கின்ற உருளை கோபி,  இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடி சிவகுமாரின் நண்பர் ஆவார். 

The mercenary gang who beat up Rowdy in the middle of the road .. cut his face into scales and brutally ..

அடிதடி, ஆள்கடத்தல், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது.  இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அப்பு தெருவில் உள்ள ஆவின் பார்லர் அருகே இவர் நின்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கூலிப்படை கும்பல், உருளை கோபியை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது, ஆனால் சுதாரித்து அவர்களிடமிருந்து தப்ப முயன்று கோபி சாலையில் ஓடினார் ஆனால் விடாது விரட்டி சென்று அந்த கும்பல் கழுத்து, தலை, உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியது, இதில் ரத்த வெள்ளத்தில் உருளை கோபி சாலையில் சரிந்தார்.

The mercenary gang who beat up Rowdy in the middle of the road .. cut his face into scales and brutally ..

ஆனால் கொலை வெறி அடங்காத அந்த கும்பல் உருளை கோபியில் முகத்தை செதில் செதிலாக வெட்டியது, அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிந்த பின்னரும் விடாமல் அந்த கும்பல் அவரது  முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்தது.  பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தலைமறைவானது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட கொலை என  தெரியவந்துள்ளது. ஆனால் இது யாரால் நடத்தப்பட்ட கொலை என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios