Asianet News TamilAsianet News Tamil

ஜாதி வெறியில் ஆணவக் கொலையில் திடீர் திருப்பம்... பெண்ணின் தந்தையை சுற்றி வளைத்த போலீஸ்... ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை!!

காதல் திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட இளம் ஜோடி, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் தந்தை அழகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் கொலையில் அவருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
 

Sudden turn in caste honer killing
Author
Tuticorin, First Published Jul 4, 2019, 6:50 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியிலுள்ள  குளத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த திருமேனி மகன் சோலைராஜ்  வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்கு விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதி என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்கள் வெவ்வேறு  ஜாதி என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட இவர்கள், பெரியார்நகரில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின் சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். ஜோதி வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் - மனைவி இருவரும் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் சரியாக அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று  அரிவாள்களுடன் அங்கு வந்து சில நொடி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில், பலத்த வெட்டுக்காய மடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு, சூரங்குடி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  காதல் திருமணம் செய்த இந்த ஜோடி வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலை செய்த மர்ம கும்பல் யார்? என போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில்  சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
 
காதல் திருமணம் செய்த இவர்கள்  வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் தந்தை அழகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் கொலையில் அவருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உததரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நாலாட்டின்புதூர் அருகே உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஜோதியின் தந்தை அழகரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.  மேலும் இந்த கொலையில் தொடர்புடையவரகள் யார், யார்? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Follow Us:
Download App:
  • android
  • ios