செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியை… கட்டாய உடலுறவு கொள்ளச் சொன்னதால் அதிர்ந்து போன பிளஸ் 2 மாணவன்…
சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவனை அதே பள்ளியில் கம்ப்யூட்டர் டீச்சராக பணிபுரியும் பெண் ஒருவர் ஆபாசமாக பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தனியாக இருக்கும்போது உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதால் ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது கடந்த சில மாதங்களாக மீ டு மூவ்மெண்ட் மூலம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆண்களுக்கும்செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப்பட்டு வருவது அவ்வப்போது நடந்து வருகிறது.
இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள ஒரு சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அவரது பள்ளி கம்ப்யூட்டர் டீச்சர் பாலியல் தொல்லை கொடுத்தது வெளியாகியுள்ளது. மேற்கு முகப்பேரில் உள்ள பிரபல பள்ளியில் அந்த மாணவன் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் பணியாற்றும் ஸ்மிதா என்ற கம்ப்யூட்டர் டீச்சருக்கு அந்த மாணவன் மேல் ஒரு கண் இருந்துள்ளது. 40 வயதான அந்த டீச்சர் பிளஸ் 2 மாணவனிடம் பள்ளியிலேயே அத்து மீறி நடந்துள்ளார்.
மாணவனை தனது அறைக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக செயல்பட்டிருக்கிறார். இதனால் அதிர்நது போனவன் அங்கிருந்து ஓடி விட்டான்.
இதே போல் அடிக்கடி ஆசிரியை மாணவனிடம் நடந்து கொண்டள்ளார். ஒர கட்டத்தில் தனது விட்டுக் வரச்சொல்லி உடலுறவு கொள்ளச் கொல்லி வறிபுறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன மாணவன் அவனது பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் பள்ளியில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
ஆனாலும், திருந்தாதா அந்த டீச்சர் மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, மாணவனின் பெற்றோர், நொளம்பூர் காவல் நிலையத்தில், கம்ப்யூட்டர் ஆசிரியை ஸ்மிதா மீது புகார் அளித்தனர். தற்போது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.