ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை !! 8 மாத கர்ப்பிணி மனைவியை ஈவு இரக்கமின்றி கொன்ற படுபாவிகள் !!
மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது 6 வயது மகன் உள்ளிட்ட 3 பேரும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாந்து கோபால் பால். ஆசிரியரான இவர் ஆர்.எஸ்.எஸ். ஊழியராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன் ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.
பாந்து கோபாலின் மனைவி பியூட்டி 8 மாத கர்ப்பமாகவும் இருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவரது குடும்பமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர், தனது கர்ப்பிணி மனைவி, மகனுடன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்திற்கு, அம்மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர். மேலும் மாநில பா.ஜ., கட்சி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், தேசிய மகளிர் கமிஷன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இந்த கொலையை யார் செய்தது ? எதற்காக செய்யப்பட்டது? முன்விரோதம் காரணமா ? அல்லது கட்சி விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.