Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவி பிரகதி கொடூர கொலை... சிக்கிய குற்றவாளிகள்.. பரபரப்பு தகவல்...!

கோவை கல்லூரி மாணவி பிரகதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

pollachi student murder case...one person arrest
Author
Tamil Nadu, First Published Apr 7, 2019, 1:05 PM IST

கோவை கல்லூரி மாணவி பிரகதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. pollachi student murder case...one person arrest

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.pollachi student murder case...one person arrest

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முட்புதருக்குள் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணையில் அவர் கல்லூரியில் இருந்து காணாமல் போன மாணவி பிரகதி என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இதனை விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. pollachi student murder case...one person arrest

உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதனிடையே கல்லூரியில் இருந்து வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் பின் தொடர்ந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக 2 பேர் சிக்கியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் சதீஷ் என்பவர் பிடிபட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளி பிடிக்க போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios