Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சி பாலியல் வீடியோ மிரட்டல்... திடுக் திருப்பமாக சிக்கிய 5வது காமுகன்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வழக்கில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பான வழக்கில் புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.  

pollachi sex case manivannan arrested
Author
Tamil Nadu, First Published Apr 10, 2019, 2:42 PM IST

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வழக்கில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பான வழக்கில் புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.  pollachi sex case manivannan arrested

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வழக்கில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக ஏற்கனவே திருநாவுக்கரவு, செந்தில், வசந்தராஜா, சபரிராஜ் ஆகிய 4 பேர் குண்டர் சட்டம் பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரித்து வரப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது மணிவண்ணன் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார். pollachi sex case manivannan arrested

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த மணிவண்ணனை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை வரை மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளதாக சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு மணிவண்ணன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் இந்த வழக்கில் 5 வது நபராக மணிவண்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios