Asianet News TamilAsianet News Tamil

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ் 1 சிறுவன்… அழகான பெண் குழந்தை பிறந்தது !!

பல்லடம் அருகே பிளஸ் 1 படிக்கும் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டதால் பிளஸ் 2 மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

plus two girl have a child
Author
Tirupur, First Published Sep 2, 2019, 8:35 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த சரவணன் மாணவன் ஒருவனுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

plus two girl have a child

இந்த நிலையில் சரவணன்  கடந்த ஆண்டின் பாதியிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டான். ஆனாலும்  மல்லிகாவுடனான தொடர்பை விடவில்லை. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுவதால், அந்த மாணவியின் வீ்ட்டிற்கு அந்த சிறுவன் அடிக்கடி சென்று வந்தான். அப்போது தனிமையைப் பயன்படுத்தி அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

plus two girl have a child

இதனால் மாணவியின் வயிறு பெரிதானது. ஆனால் அதை வெளியில் காட்டாமல் வழக்கம்போல் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வந்தாள். இந்த நிலையில் அந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அந்த மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதற்கு யார் காரணம்? என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி, தானும், தனது பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த சரவணனும் நெருங்கி பழகியதாக கூறினார்.

plus two girl have a child

இது குறித்து மாணவியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை  கைது செய்தனர். இதற்கிடையில் மாணவியும், அவருக்கு பிறந்த குழந்தையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். பல்லடத்தில் பள்ளிக்கு சென்று வந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios